2.01.2022 காலை 10 மணிக்கு சித்தாண்டி மட்டக்களப்பு வில் உள்ள இல்லத்தில் வைத்து நடாத்தப்பட்ட நண்பர்கள் வட்டம் எனும் நிகழ்வின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிழக்குப் பல்ககை்கழகத்தின் முன்னால் துணைவேந்தர் திரு ெஐயசிங்கம்.slcdf நிறுவணத்தின் சிரேஸ்ட உத்தியேகத்தர் ஏ.சொர்ணலிங்கம்.chrd நிறுவணத்தின் மட்டக்களப்பு இணைப்பாளர் திரு பரசுராமன் மற்றும் உத்தியோகத்தர் திருமதி விஐயலட்சுமி.சிவில் சமுக செயற்பாட்டாளர் திரு செல்வகுமார் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் மற்றும் இந் நிகழ்வின் இணைப்பாளர் திரு வினாயகமூர்த்தி உட்பட பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
We are excited to announce the rural women entrepreneur project launch on 28th December 2021 in Trincomalee districts!
This project has been in the works for some time, and we are thrilled to get it off the ground finally. We aim to provide support and resources to women in rural areas interested in starting their businesses.
Starting a business can be daunting, especially in areas where resources may be scarce, but we believe these women can achieve great things with the right tools and support. We will be offering a range of services, including mentorship, training, and access to funding opportunities. We can’t wait to see all the fantastic businesses that will come out of this project!
Mr. Pragalathan and Sooriya & Vitha conducted the first phase of the women entrepreneur program.
Empowering women entrepreneurs in the Trincomalee district, or any region, is essential for various social, economic, and developmental reasons. Women entrepreneurs can contribute significantly to the local economy by creating jobs, generating income, and boosting economic activity. Allowing women to start and run businesses increases economic growth and development in the district.
Women’s economic empowerment through entrepreneurship alleviates poverty by providing them with avenues to generate income and improve their living standards. This can positively impact the overall well-being of families and communities.
It also sends a powerful message that women can excel in business and leadership roles, breaking down stereotypes and fostering a more inclusive society.
கொரோனா தொற்று முடக்கநிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு ‘பிளேச் ரூ ரீஸ்ரோர் ‘ அரசசார்பற்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இன்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்மடு,கண்ணகிபுரம்,பேத்தாழை,புதுக்குடியிருப்பு மற்றும் கறுவாக்கேணி போன்ற கிராமங்களைச் சேர்ந்த வாழ்வாதராம் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த 100 குடும்பங்களுக்கு 1500 ரூபா பெறுமதிவாய்ந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
வாழைச்சேனை அன்னை திரேசா ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் அருட்தந்தை நோட்டன் ஜோன்சன் ,’பிளேச் ரூ ரீஸ்ரோர் ‘ அமைப்பின் பணிப்பாளர் சி.சிவயோகநாதன்,கிராமசேவகர் அ.பிரபு ஆகியோர் கலந்துகொண்டு இவ் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
வாகரை பிரதேசத்திலும் குறித்தஅமைப்பு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர்.
அன்னை திரேசா ஆலயத்தின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியமும் விடுத்த வேண்டுகோளினையடுத்து இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டதாக மேற்படிஅமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
Humanitarian Project in Collaboration with Tamil Aid & IOC Tamil Radio UK
Tamil aid தொண்டு நிறுவணம் லண்டன் நிதியுதவி மூலம் IOC தமிழ் வானொலி லண்டன் அணுசரனையுடன் உலர் உணவு விநியோகத்திற்கான 1000 பவுண்ஸ் நிதியுதவியுடன் கொரணா பெரும் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த வறிய மக்களுக்காக மேற்படி நிதியுதவி மூலமான உலர் உணவுப் பொருட்கள் 09 July 2021 வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டமானது போரினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இப்போதும் கருதப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இப்படியான பின்னடைவுகளை அந்த மாவட்ட மக்கள் பல அழுத்தங்களையும் தொடர்ந்தும் சந்தித்து வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த கொரோனா தோற்று நோயின் தாக்கம் அந்த மாவட்டம் தொடர்ந்தும் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகின்றது.
மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் நாட்கூலி செய்கின்றவர்கள், வீடுகளில் முடங்கி போய் இருக்கின்றனர். அவ்வப்போது அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்ற ஊரடங்கு உத்தரவும் அந்த மாவட்டத்தில் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்துகின்றது.
வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. கொரணா வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க வேண்டிய தேவையும் அந்த மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றது.
இந்த விதத்தில் புலத்தில் வாழ்கின்ற சமூகம் தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு சாட்சியாக இங்கிலாந்து நாட்டில் இருக்கும் அமைப்புகள் மற்றும் வானொலிகள் ஐஓசி தமிழ் வானொலி இவர்கள் இணைந்து நாட்டில் செயல்பட்டு கொண்டு வரும் PLEDGE TO RESTORE FOUNDATION ஊடாக நிவாரண உதவிகளை செய்திருக்கின்றார்கள்.
அம்பாரை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 22 கிராம சேவகர் பரிவுகளில் ஒன்றான காஞ்சிரங்குடா பிரிவு சுமார் 158 குடும்பங்களையும், 499 சனத்தொகையையும் கொண்ட பின்தங்கிய கிராமமாக காணப்படுகின்றது.
யுத்தகாலப்பகுதியில் இக்கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் இங்கு வாழும் மக்கள் தமது வாழ்வாhர தொழிலாக மீன்பிடி, விவசாயம், கூலித்தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இக்கிராமத்திற்குட்பட்டுள்ள ரூபஸ் குளம் இப்பகுதிமக்களின் வாழ்வாதாரத்தில் மிகவும் பங்களிப்பு செய்து வருகின்றது. இப்பகுதி மீனவர்களை உள்ளடக்கிய ரூபஸ் குள நன்னீர் மீனவர் சங்கம் 45 உறுப்பினர்களை கொண்டு காணப்படுகின்றது. அவர்களுடன் கலந்துரையாடி இத்திட்டத்தினை இங்கு செயற்படுத்த முடிந்தது.
Pledge to Restore Foundation நிதி அனுசரணையில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.வு.கஜேந்திரன் பங்குபற்றுதலுடன் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.வு.கஜேந்திரன் பங்குபற்றுதலுடன் உதவிப் பிரதேச செயலாளர் திரு.சதிசேகரன், மற்றும் இவ் அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் திரு.இரா. விக்னேஸ்வரன், அக்கரைப்பற்று பகுதி இணைப்பாளர் திரு.தினேஸ், திருக்கோவில் இணைப்பாளர் சேந்தன் மற்றும் மீன்பிடி அபிவிருத்தி உத்தியோகத்தர் அபராஜிதன், மீன் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் திரு.ரவிக்குமார் ஆகியோரது பங்குபற்றுதலுடன் (10.08.2021) பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் ரூபஸ் குள நன்னீர் மீன்பிடி மீனவ சங்க செயலாளர் திரு.தியாகராஜா, பொருளாளர், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்றபோது.
Pledge to Restore ஆஸ்திரேலிய நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்ற அமைப்பாகும் இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் எமது அலுவலகம் அமைந்திருக்கின்றது.
கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு தொழில் வாய்ப்புகளை இழந்த அல்லது
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எமது அமைப்பு பல்வேறு நிவாரண பணிகளை வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செய்திருக்கின்றோம்.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் விவசாய மற்றும் கல்வித் அபிவிருத்திக்கான செயல்திட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணை அபிவிருத்திக்கான செயல் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
நாட்டில் கொரோனா பாதிப்பால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளான நிலையில் இணையவழி ஊடாக மற்றும் ஏனைய தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி கல்வியை தொடர்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா (தேசிய பாடசாலை) கல்லூரியில் தற்போது ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ளுஅயசவ ஊடயளளசழழஅ ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதேச செயலாளர் உரையாற்றுகையில், சிறந்த ஒரு முயற்சியாகவும், மீனவர்களுக்கு இந்த கொரோனா காலப்பகுதியில் வெளியிடம் செல்லாது தமது பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்ள பயனுடையதாக காணப்படுகின்றது எனவும், கடந்த வருடம் கஞ்சிகுடிச்சாறு குளத்திலே மீன்குஞ்சுகளை விட்டுள்ளனர். இந்த வருடம் ரூபஸ் குளம், தொடர்ந்து சாகாமம், தங்கவேலாயுதபுரம், பெரியகுளம் போன்ற குளங்களையும் இணைத்து மீன் வளர்ப்புத் திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உட்புகுத்தி சிறந்த வருமானம் ஈட்டுகின்ற தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து மீனவ சங்கத்தினர் உரையாற்றும் போது, இத்திட்டத்தினூடாக கட்டாயம் நாங்கள் பயனடைவதுடன் விடப்பட்ட இக்காலப்பகுதிக்குள் சிறிய வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க மாட்டோம் என்பதுடன், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை நாங்கள் தவிர்த்து 3.5 இஞ்சிற்கு மேற்பட்ட வளைய வலைகளை பயன்படுத்தி பிடிப்பதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பிடப்பட்ட நிகழ்வினை எங்களிடம் பொறுப்பளிக்கப்பட்டது போல மிகவும் சிரமத்தின்மத்தியிலும், கொரோனா சூழ்நிலை மத்தியிலும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.. குறிப்பிட்ட நிகழ்வினை செய்தித்தாள்களிலும் (மட்டக்களப்பு செய்தி, வீரகேசரி, டாண் செய்தி போன்றவற்றிலும் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Pledge to Restore Foundation நிதி அனுசரணையில் இந்த அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் திரு.இரா. விக்னேஸ்வரன் அவர்கள் பிரதேச செயலாளர் திரு.T.கஜேந்திரன் அவர்களுடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்றபோது…..
நாட்டில் Covid-19 வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மீனவர்களை பாதுகாக்கின்ற வகையில் இன்று இந்த “நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சங்கம் ருபேஸ் குளம்” மீனவர்கள் பயன் அடைகின்ற வகையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை ரூபேஷ் குளத்தில் பராமரித்து அதனை இந்த குளத்தின் அங்கத்தவர்களான 34 குடும்பங்கள் பயனடைய இருக்கின்றார்கள்.
இதற்காக Pledge to Restore Foundation அமைப்பாக நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.
கடந்த வருடம் கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டதன் ஊடாக கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து தடையின் போது மக்கள் உணவுத் தேவைக்காக இந்த மீன்களை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் தொடர்ச்சியாக கடல் மீன்களுக்கு நிகராக நன்னீர் மீன்களுக்கும் விலை சமமாக இருக்கின்றது. இதனூடாக வறுமையில் இருக்கின்ற எமது மீனவர்கள் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு இது வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது. எனவே நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து இந்த சங்கங்களுடன் எமது அமைப்பு பணியாற்ற விரும்புகின்றது அத்துடன் இந்த மீன்களுக்கான பெறுமதிசேர் திட்டங்களையும் செய்வதற்காக நாம் ஆராய்ந்து வருகின்றோம் இத்திட்டத்தை நாங்கள் முறையாக பயன்படுத்துகின்றபோது மீனவர்கள் வறுமை நிலையிலிருந்து மேலோங்கி நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான நிலை உருவாகும் எனவே தொடர்ந்து எமக்கு ஆதரவை வழங்கி கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.
நாம் அனைவரும் இணைந்து செயற்படுகின்ற போது நன்னீர் மீன் வளர்ப்பு ஒரு பாரிய முன்னேற்றம் அடைந்த நல்ல வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுகின்ற சிறந்த தொழிலாக மாற்றம் அடையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை.
கடந்த வருடம் கஞ்சிகுடிச்சாறு குளத்திலே மீன்குஞ்சுகளை விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தோம் இந்த வருடம் ரூபஸ் குளம், தொடர்ந்து சாகாமம், தங்கவேலாயுதபுரம், பெரியகுளம் போன்ற குளங்களையும் இணைத்து மீன் வளர்ப்புத் திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உட்புகுத்தி சிறந்த வருமானம் ஈட்டுகின்ற தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இத்திட்டத்திற்காக அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்புகளையும் எதிர்பார்த்து இருக்கின்றோம்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கின்ற எமது நிறுவனத்தின் இணைவைப்பாளர்கள் திரு. இதயதினேஷ் மற்றும் திரு. சேந்தன் ஆகியோருக்கு இந்த வேளையில் நாங்கள் நன்றி கூறுகின்றோம்.
மீன் வளர்ப்பு திட்டத்தில் பங்கு பெறுகின்ற உத்தியோகத்தரான
Mr.Ravikumar (Aquaculture extension Officer- Central)
Mr.Abirajithan (Fisheries Development Officer- Provincial)
ரூபஸ் குலத்தின் மீனவ சங்க செயலாளர் திரு. தியாகராசா ஆகியோருடன் இந்த நிகழ்வை சிறப்பித்து இருக்கின்ற திருக்கோவில் பிரதேச செயலாளர்
Mr.T.Gajenthiran ஆகியோருக்கும் நன்றி கூறிக் கொள்கின்றோம்
நன்றி
R. Vigneswaran (Director of Pledge to Restore Foundation-Ampara)
Pledge to Restore Foundation ஆஸ்திரேலிய நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்ற அமைப்பாகும் இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் எமது அலுவலகம் அமைந்திருக்கின்றது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற கோரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு தொழில் வாய்ப்புகளை இழந்த அல்லது
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எமது அமைப்பு பல்வேறு நிவாரண பணிகளை வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செய்திருக்கின்றோம்.
வடக்கு மாகாணத்தில் விவசாய மற்றும் கல்வித் அபிவிருத்திக்கான செயல்திட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணை அபிவிருத்திக்கான செயல் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளான நிலையில் இணையவழி ஊடாக மற்றும் ஏனைய தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி கல்வியை தொடர்வதற்கான ஸ்மார்ட் கிளாஸ் ரூம் Smart Classroom ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் இதற்காக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுஜன் அவர்கள் நிதி உதவிகளையும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றார்.
நாட்டில் Covid-19 வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மீனவர்களை பாதுகாக்கின்ற வகையில் இன்று இந்த “நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சங்கம் ருபேஸ் குளம்” மீனவர்கள் பயன் அடைகின்ற வகையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை ரூபேஷ் குளத்திலேயே பராமரித்து அதனை இந்த குளத்தின் அங்கத்தவர்களான 34 குடும்பங்கள் பயனடைய இருக்கின்றார்கள்
இதற்காக Pledge to Restore Foundation அமைப்பாக நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். கடந்த வருடம் கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டதன் ஊடாக கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து தடையின் போது மக்கள் உணவுத் தேவைக்காக இந்த மீன்களை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் தொடர்ச்சியாக இன்று கடல் மீன்களுக்கு நிகராக நன்னீர் மீன்களுக்கு விலை சமமாக இருக்கின்றது. இதனூடாக வறுமையில் இருக்கின்ற எமது மீனவர்கள் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு இது வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது எனவே இந்த நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து இந்த சங்கங்களுடன் எமது அமைப்பு பணியாற்ற விரும்புகின்றது அத்துடன் இந்த மீன்களுக்கான பெறுமதிசேர் திட்டங்களையும் செய்வதற்காக நாம் ஆராய்ந்து வருகின்றோம் இத்திட்டத்தை நாங்கள் முறையாக படுத்துகின்றபோது இந்த மீனவர்கள் வறுமை நிலையிலிருந்து மேலோங்கி நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான நிலை உருவாகும் எனவே தொடர்ந்து எமக்கு ஆதரவை வழங்கி கொண்டிருக்கின்ற பிரதேச செயலகம் மற்றும் மீன்பிடி திணைக்களம் ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்.
கடந்த வருடம் கஞ்சிகுடிச்சாறு குளத்திலே மீன்குஞ்சுகளை விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தோம் இந்த வருடம் ரூபஸ் குளம். தொடர்ந்து சாகாமம் தங்கவேலாயுதபுரம் பெரியகுளம் போன்ற குளங்களையும் இணைத்து மீன் வளர்ப்புத் திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உட்புகுத்தி சிறந்த வருமானம் ஈட்டுகின்ற தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கின்ற எமது நிறுவனத்தின் இணைவைப்பாளர்கள் இதயதினேஷ் மற்றும் சேர்ந்த ஆகியோருக்கு இந்த வேளையில் நாங்கள் நன்றி கூறுகின்றோம்.
மீன் வளர்ப்பு திட்டத்தில் பங்கு பெறுகின்ற உத்தியோகத்தரான
Mr.Ravikumar (Aquaculture extension Officer- Central)
Mr.Abirajithan (Fisheries Development Officer- Provincial)
ரூபஸ் குலத்தின் மீனவ சங்க செயலாளர் திரு தியாகராசா ஆகியோருடன் இந்த நிகழ்வை சிறப்பித்து இருக்கின்ற திருக்கோவில் பிரதேச செயலாளர்
MR.T.Gajenthiran ஆகியோருக்கும் நன்றி கூறிக் கொள்கின்றோம்
மட்டக்களப்பு மாவட்டத்திலே கால்நடை வளர்க்கும் பண்ணையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நீங்கள் அனைவருமே அறிந்திருப்பீர்கள்.
மேய்ச்சல் தரை என்று அழைக்கப்படுகின்ற இடங்களில்பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அவர்களுடைய பொருளாதாரங்கள் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது.
இதன் அடிப்படையில் எமது அமைப்பானது பண்ணையாளர்கள் சங்கங்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
அதன்டிப்படையில் அந்த பகுதிகளில் இருக்கின்ற மாடுகள் சட்டத்துக்கு உட்பட்டு பதிவு செய்யாமல் இருப்பதனால் கால்நடைகளை நாங்கள் அந்த சட்டத்துக்கு உட்பட்டு பதிவு செய்ய வேண்டிய தேவையும் வந்திருக்கின்றது.
அந்த விதத்தில் எமது அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போது இருக்கின்ற பிரச்சினைகளுக்கான பொருளாதாரத்தை தக்க வைக்கின்ற முயற்சியாக சந்திப்புகளையும், ஏற்பாடுகளையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
Large stretches of the Batticaloa Kalmunai Highway, and low lying areas in Batticaloa have been inundated in the recent heavy rains.
Families in Kallady, Navatkudha, Nochchimunai and Manchanthoduwai have left their flooded houses. The Batticaloa MC has been taking steps to drain the flooded areas. Batticaloa Mayor Thiagaraja Saravanapavan, Deputy Mayor Kanthasamy Sathiyaseelan and Commissioner Manickavasagar Thayaparan visited the affected areas and instructed officials to provide relief. The Batticaloa Meteorology Department reported that Vakarai received 214.7 mm of rain, Batticaloa 150.7 mm, Mylambaveli 155.2 mm, Pasikkudha – 145.2 mm, Rugam 120.3 mm, Unnichchai 61.0 mm, Thumbankerny 38.2 mm and Kaddumurivu 8.0 mm yesterday (22).